வஞ்சக பாஜகவையும் துரோக அதிமுகவையும் விரட்டியடிப்போம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, துரோக அதிமுக எனக்குறிப்பிட்டு திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக யாருக்கும் எப்போதும் துரோகம் செய்ததில்லை என்றும் திமுகதான் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக்கோரி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து விமர்சித்தார். 16 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக அப்போதே கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றாதது ஏன் என்றும் அப்போதே ஏன் திமுக கல்விக் கொள்கை குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை.. பறந்த ஃபோன் கால்.. இபிஎஸ்ஸிடம் விஜய் சொன்னது என்ன..?

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளாக நடக்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி என விமர்சித்த அவர், தமிழகத்தில் குற்றச் செயல்கள் நடக்காத நாட்களே இல்லை என்றும் கூறினார். மேலும், தூர்வாரப்படாத நிலையில் இருந்ததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலையால் மூடியதாகவும் கால்வாய் தூர்வாரப்படாத நிலையிலிருந்தது திமுகவினருக்கே பிடிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அந்த வீடியோவில் வந்த வார்த்தைகள்... வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா..!