மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தனது ஸ்டைலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அழுத்தம் கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் என்று விமர்சித்தார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!
ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும் என்று கூறியுள்ளார். தனது Owner பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா என்றும் சவால் விடுகிறேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மாஸ் ஆரம்பம்...! இபிஎஸ் பெயரில் முதல் விருப்ப மனு… களைகட்டிய அதிமுக தலைமைக் கழகம்…!