அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை ஸ்டாலின் நிரூபித்து வருவதாக கூறினார்.

உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது என்றும் அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்களே என்றும் சாடினார். உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா? அப்படியென்றால், உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்... சோகத்தில் மூழ்கிய இஸ்லாமிய சமூகத்தினர்!

குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி எனவும் இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்., கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன் "SIR"-ஐ காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும், பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி என்று சரமாரியாக சாடினார். இந்த ஆட்சி வீழும்! மக்களுக்கான அதிமுக ஆட்சி அமையும் அப்போது எல்லா சார்பிலும் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!