அரசு பள்ளிகளில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏப்ரலுக்கு பதில் மே 31 வரை மறுநியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றும், அரசு பள்ளிகளில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வெறும் வதந்தி என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்திருக்கிறார்.

உயர்நிலை, மேல் நிலை வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் நடுவே ஓய்வுபெற்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அந்த கல்வி ஆண்டின் இறுதி வரை அதாவது மே 31 வரை மறு நியமனம் செய்யப்படுவார்கள். அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

அதாவது கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் ஏப்ரல் வரை மட்டுமே மறுநியமனம் செய்யும் வகையில் இருந்த விதியில் திருத்தம் செய்து மே 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, பள்ளிக் கல்வித் துறை புதிய அரசாணையை வெளியிட்டது.

இதையும் படிங்க: இம்மாதூண்டு திறமை கூட இல்ல... முக்கிய துறைகளில் வேலுவுக்கு ஏன் முன்னுரிமை? அன்புமணி விளாசல்!
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையில், “ஆசிரியர்களுக்கு ஓய்வுபெற்று மறு நியமனம் வழங்கும் போது கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதை திருத்தம் செய்து கல்வி ஆண்டின் இறுதிநாள் (மே 31ம் தேதி) வரை மறு நியமனம் வழங்க அனுமதி அளித்து அரசாணை வழங்க அரசிடம் கோரப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” எனக்கூறிப்பிட்டிருந்தது.
உடனே அரசு பள்ளிகளில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்த தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமகவில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்.. கௌரவ தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதி..!