கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் கொலையில் குழந்தையின் உடற்கூராய்வு குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நேற்று இரவு (ஜூன் 14) சுமார் 10.30 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். குழந்தை வந்தபோதே மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தது. அதிக ரத்த இழப்பு ஏற்பட்டிருந்ததுடன், பிறப்புறுப்பு மற்றும் மலவாய் பகுதிகளில் கடுமையான காயங்களும், தொடர்ந்து ரத்தப்போக்கும் காணப்பட்டது.
உடனடியாக குழந்தை அனுமதிக்கப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. மேலும், சுவாசக் கோளாறு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வென்டிலேட்டர் மற்றும் பிற உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முழுமையாக பரிசோதனை செய்து அவசர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

பிறப்புறுப்பு பகுதியில் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை சரிசெய்ய மீளமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மலவாய் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவ நடைமுறைகளின்படி குடலின் ஒரு பகுதி தற்காலிகமாக வெளிப்புறமாக மாற்றி அமைக்கப்பட்டது.
எனினும், குழந்தைக்கு ஏற்கனவே அதிகளவில் ரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் கடுமையான உடல் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அதிகாலை 4.30 மணியளவில் குழந்தையின் நிலை மேலும் கவலைக்கிடமாக மாறியதாகவும், காலை 7 மணியளவில் சுவாசம் மிகவும் குறைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைகள் அனைத்தும் அளிக்கப்பட்டபோதிலும், காலை 7.30 மணியளவில் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படவில்லை என்றாலும், கீழ்பகுதியில் ஏற்பட்டிருந்த காயங்கள் மிகவும் தீவிரமானவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகள் கிடைத்த பிறகு கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர்.
குழந்தையின் உயிரிழப்புக்கு கடுமையான உடல் வன்முறையால் ஏற்பட்ட காயங்களும், அதிகளவிலான ரத்த இழப்பும் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!