இன்று முதல் நான்கு நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கின்ற சூழலில் நான்கு நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பகுதிகளிலும் திடீர் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, நெல்லை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி அவலாஞ்சியில் அதி கனமழை பெய்து வருவதால் மண் சரிவு, மரங்கள் சாய்வது, பாறைகள் மற்றும் மின் கம்பங்கள் சரிவு என அடுத்தடுத்து பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இன்றும் கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையும் தெரிவித்திருக்கின்றது. நெல்லை, தேனி, தென்காசி, குமரி இந்த நான்கு மாவட்டங்களில் இன்றைய தினம் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமைய தெரிவித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் மேலும் ஆறு மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: உஷார் மக்களே..! வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்; தமிழகத்திற்கு மிக முக்கிய அலர்ட்!
இதையும் படிங்க: கனமழையால் நேர்ந்த விபரீதம்; கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார் - பயணிகள் நிலை என்ன?