முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டது. மேற்கு வங்காளத்தின் வடமேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய வங்கடல் கடற்கரையில் இருந்து சாகர் தீவுக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ, திகாவிற்கு தென்கிழக்கே 130 கிமீ, பாரதீப்பிற்கு கிழக்கு - வடகிழக்கே 190 கிமீ மற்றும் கெபுபரா (வங்காளதேசம்) க்கு மேற்கு-தென்மேற்கே 210 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது. இது இன்று (மே 29) பிற்பகலுக்குள் மேற்கு வங்கம் - வங்காளதேச கடற்கரைகளை சாகர் தீவுக்கும் கேபுபாரா வங்காளதேசத்துக்கும் இடையில் கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மேற்கு வங்கம் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை சாகர் தீவு -கேபுபாராவிற்கு இடையே கரையைக் கடந்தது.
இதையும் படிங்க: தொடரும் ரெட் அலர்ட்... அச்சுறுத்தும் கனமழை... எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!!

இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் நீடித்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் - வங்க தேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சாகர் தீவுகள் - கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகல் கடக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தமிழகத்தை சுத்துப்போடும் மழை!!