கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீரென உயிரிழப்பு - தவறான சிகிச்சையால் பெண் உயிர் வந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் உமா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் கடந்த 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் சுமார் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உமாவின் கருவை கலைப்பதற்காக மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு கரு கலைப்பு மாத்திரை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாத்திரை சாப்பிட்டதும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!
இது பற்றி அறிந்த உமாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் உமா உயிரிழந்தாகவும்,மேலும் கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்து வரும் உமாவிற்கு படுக்கை வசதி கூட ஏற்பாடு செய்து தரப்படவில்லை எனக்கூறியும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த பெண்ணின் உடலை முழு வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மேலும் அந்தக் குழுவில் வேறு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவ குழுவினர் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்த நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த நிலையில் உயிரிழந்த உமாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இன்று ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கரைபுரண்ட பக்தர்கள்... அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்...!