அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் வனத்துறை சார்பாக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தொடர்ந்த பொது நல வழக்கில் உத்தரவு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு.
அதில், "திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்திரியார் திருக்கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்' என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது இந்த பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கே அகஸ்தியர் கோவிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது.
அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும் ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து மூலம் பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல.
இதையும் படிங்க: தீர்ப்பு சாதகம்னா குதூகலிப்பது.. எதிர்ன்னா வக்கிர புத்தியை காட்டுவது.. திமுகவை டேமேஜ் செய்த இந்து முன்னணி!

மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அகஸ்தியர் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கும் உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் டிரஸ்ட் சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, " நெல்லை அருள்மிகு அகஸ்தியர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: நீதி பரிபாலன வரலாற்றில் தீரா களங்கம்.. துணைவேந்தர் நியமன சட்ட தடைக்கு முத்தரசன் எதிர்ப்பு.!