சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “2019ம் ஆண்டு முதலே கொரோனா பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், 2 அல்லது 3 நாட்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் மட்டுமே ஏற்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் 1800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் புனேவில் உள்ள வைரஸ் பற்றிய ஆய்வு செய்யும் அமைப்பிற்கு 19 மாதிரிகளை அனுப்பினோம். அவர்கள் அனைத்து வைரஸுமே வீரியம் இல்லாத வைரஸ் ஒமைக்ரான் வகை வைரஸ் என்றும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளனர் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படியே அடிக்கடி கைகளைக் கழுவுதல், தும்மும் போதும், இருமும் போது வாயை மூடிக்கொள்ளுதல், கண்ட இடத்தில் எச்சில் துப்பக்கூடாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் போன்ற வழக்கமான நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், வயதானவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிவது அவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்பதாலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எச்சரிக்கை... இந்தியாவில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு - கிடுகிடுவென உயரும் பலி எண்னிக்கை!