இந்திய இலங்கை கடல் எல்லையில், குறிப்பாக பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது நீண்டகால பிரச்சினையாக உள்ளது. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளம் மிக்க பாக் நீரிணையை நம்பியுள்ளனர். இந்த கடற்பகுதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 25 முதல் 40 கி.மீ. அகலமே உள்ளதால், எல்லை தாண்டுவது எளிதாக நிகழ்கிறது.

அவ்வாறு இலங்கை எல்லைக்குள் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக்கி விடுகிறது. மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்திய அரசு இலங்கையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும், மீனவர்கள் பிரச்சனைக்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
இதையும் படிங்க: திமுககாரங்களே போதைப் பொருள் விக்குறாங்க! காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி..!

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த எட்டு மீனவர்கள், இன்று அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பன்னாட்டு கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மீனவர்களையும் அவர்களது படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வலியுறுத்தினார்.

தொடர்ந்து இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வது மீனவர்களின் நம்பிக்கையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், மீன் பிடி தொடர்பான பிரச்சனையை கையாளுவதில் கட்டுப்பாடு, பரஸ்பர புரிதலை உறுதி செய்ய தூதரக நடவடிக்கை தேவை என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. அடுத்த உயிர் போறதுக்குள்ள எதையாச்சும் செய்யுங்க! கிழித்து தொங்கவிட்ட நயினார்..!