காஞ்சிபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அலாபாத் ஏரியில் தனியார் தொழிற்சாலை நிறுவனம் மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது ஏரிக்கரையில் வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்கும் படி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு முதலமைச்சரே சொன்னாலும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா தர முடியாது என கறாராக தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களிடம் பேசிய அவர், “நானாவது எம்.எல்.ஏ. தான், முதலமைச்சரே சொன்னாலும் கூட பட்டா தர முடியாது. நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என நீதிமன்றமே சொல்லியிருக்கு. அதை மீறி யாரால் பட்டா தர முடியும்” என பேசினார். எம்.எல்.ஏ.வின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அலாபாத் ஏரியை கடந்த மார்ச் மாத இறுதியில் கோமாட்சு நிறுவனம், எக்ஸ்னோரா மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை 100 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: வெயிலுக்கு லீவு...விளாசப்போகும் மழை...எந்த ஊர்ல தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காலிமேடு அருகே அலாபாத் ஏரி உள்ளது. இது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், இதை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பிற்கு பட்டா தர முடியாது என மக்களிடம் தெரிவித்த எம்.எல்.ஏ. எழிலரசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: கொஞ்சம் இருங்க பாய் ! குலை நடுங்க வைக்கும் ஈரான்...அலறி துடிக்கும் இஸ்ரேல்...