• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பச்சை துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார்... ஈபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!!

    போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை தமிழ்நாட்டில் பலிக்காது என இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Raja Fri, 13 Jun 2025 21:08:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    M.R.K.Panneerselvam has responded to EPS by saying that the trick of deceiving farmers

    உழவர்களுக்குப் பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுவதாக எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டத்தில் அரசு விவசாயக் கண்காட்சி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியும் செயல்படுத்தியும் வருவதை பட்டியல் போட்டுச் சொன்னார். அதனைப் பொறுக்க முடியாமல் பொறுமிக்கொண்டு அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. நான்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி பழனிசாமியின் முகத்திரையை முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் வைத்துக் கிழித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தலைவாசலில் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.1,025 கோடி மதிப்பீட்டில், மிகப் பெரிய கால்நடைப் பூங்காவைத் துவக்கி வைத்தது பற்றி பழனிசாமி பெருமை அடிக்கிறார். 2017-ல் முதல்வராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் அவர்தான் முதல்வராக இருந்தார்.

    நான்கு ஆண்டுகள் வாரிச் சுருட்டுவதற்கும் மத்திய பாஜக அரசுக்குப் பாதம் தாங்கியாகவும் சேவை செய்யவே அவருக்கு நேரம் போதவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஓட்டுக்காக அவசர அவசரமாகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தர் பழனிசாமி. முதல்வரின் உதவி மையம், காவிரி – வைகை – குண்டாறு இடையே நதிகள் இணைப்புத் திட்டம் அடிக்கல், மினி கிளினிக், வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிப்பு, ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதம் முன்பு பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும் தேர்தல் காலப் புஸ்வாணங்கள். அந்த வரிசையில்தான் தலைவாசலில் கால்நடைப் பூங்காவை உருவாக்கினார். அது நிறைவடையும் முன்பே அதில் ஒரு பகுதியை 22.2.2021 அன்று திறந்து வைத்தார் பழனிசாமி. அதாவது 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான (பிப்ரவரி 26) நாளுக்கு நான்கு தினங்களுக்கு முன்பு அந்தத் திட்டத்தை அவசரகதியில் கொண்டு வந்தார்.

    ADMK

    தான் கொண்டு வந்த திட்டம் எனத் தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, அந்தத் திட்டத்தை திமுக தடுத்துவிட்டது எனவும் சொல்கிறார். இந்த முரண்பாடுதான் பழனிசாமியை அம்பலப்படுத்துகிறது. திட்டத்தை பழனிசாமி அரசு நிறைவேறியிருந்தால் ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்த போகிறது? நீர் ஆதாரமே இல்லாத ஓர் இடத்தில் கால்நடைப்பூங்காவை அமைக்கும் முடிவைக் கடந்த 2019-ல் அறிவித்து, 2 ஆண்டுகள் ஆகியும் 50 சதவீதப் பணிகளைக்கூட முடிக்காமல் பாதியிலேயே விட்டுச் சென்றார் பழனிசாமி. .ஆனால், திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும் நீர் ஆதாரச் சவால்களையெல்லாம் சமாளித்து, உயர்மின் அழுத்த வேலிகள் அமைப்பது உள்ளிட்ட மீதமுள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகளை முடித்து தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைத்தவர் முதல்வர். விவசாயிகள் நலனுக்காகத் தனி விவசாய பட்ஜெட்டையே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையைக் கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை எப்போதும் நிறுத்தியதில்லை.‘நான் ஒரு விவசாயி’ எனச் சொல்லி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் பழனிசாமி பாணி.

    இதையும் படிங்க: நான் போலி விவசாயியா? சொல்லுற தகுதி உங்களுக்கு இல்ல ஸ்டாலின்..! இபிஎஸ் தாக்கு...

    விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண்மை சட்டங்களைக் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி. உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவர். உழவுத் தொழிலையும், உழவர்களையும் அழித்துப் பெரு முதலாளிகள் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை எதிர்த்து உழவர்களுக்கு ஆதரவாகக் கடுமையாகப் போராடியவர் தமிழக முதல்வர். 3 வேளாண் சட்டங்களைப் பலமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை கடுமையாக எதிர்த்த திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார் பழனிசாமி. அதில் உள்ள சரத்துகளை ஆதரித்து வாதங்களை எடுத்து வைத்தார். அதற்குத் தண்டனையாகத்தான் அவரை ஆட்சியிலிருந்து விவசாயிகள் வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்த பழனிசாமிதான் இன்றைக்குச் சாத்தான் வேதம் ஓதுவது போல ‘விவசாயிகளின் காப்பாளன்’ போலக் கபட வேடம் போடுகிறார். உழவர்களுக்குப் பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார்.

    ADMK

    மதுரையில் விவசாயத்தையும், பல்லுயிர்ச் சூழலையும் அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்குக் காரணமான கனிமவளச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது தானாக வழியச் சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையையும், விவசாயிகள் நலனையும் மத்திய அரசின் காலடியில் அடகுவைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் செய்தது பழனிசாமியின் அதிமுக, அதைத் தடுத்து நிறுத்தியது முதல்வர். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் எனச் சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதல்வராக உள்ளவரை மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க முடியாது என நெஞ்சுரத்தோடு சூளுரைத்து,டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதிலிருந்து பின்வாங்கச் செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்டா விவசாயிகளின் போராட்டத்தாலும் , திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடியாலும் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு மறுபுறம் மத்திய பாஜக அரசுக்குப் பயந்து அந்தப் பரிந்துரையைக் கூட மத்திய அரசுக்கு அனுப்பாமல் இருந்தது இதே கோழை பழனிச்சாமிதான்.

    பழனிசாமியின் இந்தத் துரோகத்தை எல்லாம் காலம் உள்ளவரை உழவர்களும் மக்களும் மறக்கமாட்டார்கள். இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுத்தது, முதன்முதலில் 7000 கோடி ரூபாய் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்தது மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான், அதன் வழியில் பயணித்து வரும் திராவிட மாடல் அரசும் உழவர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ததோடு, வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது திராவிட மாடல் அரசுதான். இதுவரை ஐந்து வேளாண் பட்ஜெட் மூலம் 1.94 லட்சம் கோடி ரூபாய் (1,94,074) விவசாயிகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த 2012- 2021 வரை இருந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 1.36 சதவிகிதமாக இருந்த வேளாண் வளர்ச்சி தற்போது திராவிட மாடல் ஆட்சியில் 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதோடு இதுவரை 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளிலும் சேர்த்தே வெறும் 1,38,592 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

    ADMK

    அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. காவிரி மேலாண்மை விவகாரத்தில் பாஜகவுக்கு விசுவாசியாகச் செயல்பட்ட பழனிசாமி காவிரியைப் பற்றி எல்லாம் பேசலாமா? சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட போது, ‘காவிரிய வச்சுக்கோ... அம்மா குடு’னு போஸ்டர் ஒட்டிய அடிமைகள் காவிரி விஷயத்தை பற்றி எல்லாம் பேசக் கொஞ்சமும் அருகதை அற்றவர்கள். காவிரி விவகாரத்தில் பழனிசாமி காட்டிய லட்சணத்தைப் பார்த்து, தமிழ்நாடு சந்தி சிரித்தது எல்லாம் மறந்துவிடுமா? ‘ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று 2018 பிப்ரவரியில் தீர்ப்பு சொன்னது உச்ச நீதிமன்றம். ஸ்கீம் என்றால் என்ன? என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு செய்து, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக நாடகம் நடத்தியது. அதற்கு பழனிசாமி அரசும் பக்க வாத்தியம் வாசித்தது. அன்றைக்கு எஜமான விசுவாசத்தைக் காட்டிய கோழை பழனிசாமியா காவிரியைப் பற்றிப் பேசுவது? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மோடி அரசின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம்” எனச் சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு நீக்கி, பாஜகவின் ராஜ விசுவாசத்தைக் காட்டிய கொத்தடிமைதானே பழனிசாமி.

    பழனிசாமி அரசு விவசாயிகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியதோடு மட்டுமல்லாமல் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய விவசாயிகள் மீதும் கருணையின்றி வன்முறையை ஏவியது. சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய விவசாயிகள், பெண்களின் குறைகளையும் குமுறல்களையும் கூட காது கொடுத்துக் கேட்க மனமில்லாமல் அவர்கள் மீது கொடூர அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுத் துன்புறுத்திய பழனிசாமி நானும் விவசாயி என வேடம் போடுகிறார். நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். மனதில் அழுக்கை வைத்துள்ள பழனிசாமி, என்றென்றைக்கும் உலகுக்கே உயிரூட்டும் உழவர் ஆகிவிட முடியாது. போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை எல்லாம் தமிழ்நாட்டில் என்றும் பலிக்காது. வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மதுரை மேற்கு தொகுதி யாருக்கு? செல்லூர் ராஜு மழுப்பியதால் ஏற்பட்ட குழப்பம்!!

    மேலும் படிங்க
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    இந்தியா
    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    உலகம்
    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    இந்தியா
    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

    உலகம்
    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    #BREAKING: அப்பா என்னை மன்னிச்சிடுங்க! பொது மேடையில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share