விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடந்தது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன் மூத்த மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞரணி தலைவராக நியமித்தார். இந்த நிகழ்வு பூதாகரமாக வெடித்தது. இன்று வரை பெரும் சர்ச்சையை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது என கூட சொல்லலாம்.

அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அறிவித்த போது மேடையிலேயே நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதையும் படிங்க: மனைவியால் வந்த சிக்கல்; காலைக் கட்டிக்கொண்டு அழுத அன்புமணி - இக்கட்டான முடிவெடுத்த ராமதாஸ்...!

இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். தன் சொந்த காரணங்களுக்காக இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், அன்புமணி எங்கள் எதிர்காலம் என்பதை உணர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்றும் முகுந்தன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன்... அதிரடி காட்டும் ராமதாஸ்!