தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மதுரையில் ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், அதன் தொடர்ச்சியாக இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.
இன்று மாலை சுமார் 4:20 மணியளவில் திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்கு வந்த பிரதமருக்கு, கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலின் கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்றப் சிறப்புப் பூஜையில் பங்கேற்ற அவர், நீண்ட நேரம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

கடந்த 2025 டிசம்பர் மாதம், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடும் சட்டப் போராட்டம் நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு தீபம் ஏற்றப்பட்ட நிலையில், அந்தப் சர்ச்சைக்குரியப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த முருகப்பெருமான் கோவிலுக்குப் பிரதமர் வருகை தந்தது அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான இங்குத் தரிசனம் செய்ததன் மூலம், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அடையாளங்களுக்குத் தான் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதமர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இது வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-விற்கு ஒரு கூடுதல் பலமாக அமையும் என அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. கோவிலைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பொதுமக்களுக்குப் பலத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த பிரதமருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதையும் படிங்க: கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!