தமிழ்நாட்டையே உலுக்கிய மிக முக்கியமான குற்ற சம்பவங்களில் ஒன்றாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு அதிமுகாவினுடைய ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியே சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த வழக்கு போலீஸ் வசமிருந்து சிபிஐடிக்கு மாற்றப்பட்டு பின்பு அது சிபிஐ சிபிஐ வசம் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கிட்டத்தட்ட 2019 ஆம் ஆண்டு மட்டும் பொள்ளாச்சியை சார்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹேரன் பால், பைக் பாபி என்கிற பைக் பாபு, அருளானந்தம் உள்ளிட்டோர் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். மொத்தம் ஒன்பது பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிஐ நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கினுடைய விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் பெரும்பாலும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவே நீதிபதி முன்பாக ஆஜராகி இருந்தார்கள். அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவு பெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரிடம் சட்ட விதிகள் 13ன் கீழ் கேள்விகள் கேட்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் நீண்ட காலமாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான அவர்கள் நேரடியாக சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
இதையும் படிங்க: அண்ணா விட்டுருங்கண்ணா.. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!
அதன் அடிப்படையில் அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் இருப்பிட மருத்துவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஆகியோரிடம் இறுதியாக விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மகளிர் நீதிமன்றம் தற்பொழுது மே 13 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறது.
தீர்ப்பின் முழு விவரம் என்ன?
இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேர் மீது இருந்த 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றாச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளது. பொள்ளாச்சி பாலிகள் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்பது பேரில் குற்றவாளிகள் என கூறப்பட்டிருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எட்டு பெண்கள் ஆஜராகி தங்களுடைய எந்தளவு தாங்கள் பாதிக்கப்பட்டிருந்தோம் என்பது தொடர்பாக கூறியிருந்த கருத்துக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட A1 சபரிராஜன், A2 திருநாவுக்கரசு, A3 சதீஸ், A4 வசந்தகுமார், A5 மணிவண்ணன், A6 பாபு, A7 ஹேரன் பால், A8 அருளாணந்தம் (முன்னாள் அதிமுக நிர்வாகி), A9 அருண்குமார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் சிறப்பு வழக்கறிஞரான சுரேந்திர மோகன் சிபிஐ தரப்பில் ஆஜரானார். 120 (B) 366, 342, 354 A, 354 B, 370, 376 D, 376 (N) and 509 of IPC , IT Act 66 E, 67 , பெண் வன்கொடுமை வழக்கு Section 4 of TNPWH சட்ட பிரிவுகளின் கீழே விசாரணை நடத்தப்பட்டது.
ஆதாரங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு தற்பொழுது திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட ஒன்பது பேர் பொள்ளாச்சி வழக்கில் கைதாகி இருந்த அந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்கின்ற ஒரு முக்கியமான தீர்ப்பினை கோவை மகிளா நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. சிபிஐ விசாரணை அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்பதன் மூலமாக அவர்களுக்கான உச்சபட்ச தண்டனை என்ன என்ற விவரம் இன்னும் சற்ற நேரத்தில் வெளியாகக்கூடும்.
ஒன்பது பேர் மீதான தண்டனை விவரம் இன்று மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி நந்தினி தேவி குறிப்பிட்டிருக்கின்றார். இந்த வழக்கில் மிக மிக முக்கியமான சட்ட பிரிவுகள் ஐபிசினுடைய பிரிவுகள் எல்லாம் அப்போது பயன்படுத்தப்பட்டிருந்தன. எனவே அவர்களுக்கு உச்சபட்ட தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். இவர்கள் குற்றவாளிகள் தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதனால் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பது குறித்து நாடே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் எங்கே..? மூலை முடுக்கெல்லாம் களமிறங்கிய பாதுகாப்பு படை..!