அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வரும் நிலையில், விரைவில் சமரசம் முடிவு எட்டப்படும் என்று தொண்டர்களும், பாமக நிர்வாகிகளும் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியில் செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார். சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று தெரிவித்த ராமதாஸ், தண்ணீர்விட்டே வளர்த்தும் இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என பாரதியார் பாடி இருப்பதாக சுட்டி காட்டினார்.

நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டுமென பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறியதாகவும் நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ததாகவும் தெரிவித்தார். அன்புமணிக்கு தலைவர் பதவி விட்டு தயர தயார் என தான் கூறியதாக பேசிய ராமதாஸ், தன்னை ஒதுங்க கூறியதாகவும் சுட்டி காட்டினார். ஜி.கே. மணி சிவப்பிரகாசம் இருவரையும் சந்திக்க அன்புமணி சம்மதிக்கவில்லை என்றும் என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோபு ஒரு வக்கீலே இல்ல! ராமதாஸ் நடவடிக்கை மீது அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு..!

நீயா நானா என பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த பிறகு தற்போது செய்தியாளர்களை சந்திப்பதாகவும், எல்லாம் தனக்கே வேண்டும் என அன்புமணி நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். தினம்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன், எத்தனை உயிருக்கும் மேலாக எண்ணுகிறார்கள், கொள்ளு பேரன் பேத்திகளோடு கொஞ்சம் விளையாடுங்கள் என என்னிடம் கூறுகிறார்கள் என்று கூறினார்.

மக்களோடு 46 வருடங்களாக பழகி வருகிறேன், உழைத்து உருவாக்கி கட்டி காத்த கட்சி., பாமக தொண்டர்களை தான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்., எனக்கு உரிமை இல்லையா என்று கேட்பதே அவமானமாக உள்ளது., ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து கட்டிய பாட்டாளி மக்கள் கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி அவரே ஒவ்வொருவருக்கும் பேசி அன்புமணி மானபங்கம் செய்துவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழக்கறிஞர் பாலுவுக்கு கல்தா கொடுத்த அன்புமணி... மீண்டும் பதவி தராமல் இருக்க காரணம் இதுவா?