சோளிங்கர் அருகே காதல் விவகாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தில் பிளஸ் -1மாணவியும் காயம் அடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வரும் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு செல்லவிருந்தார். சென்னை அன்னனூரை சேர்ந்தவர் லட்சியா. இவர் பிளஸ்-1 முடித்துவிட்டு வரும் கல்வி ஆண்டில் பிளஸ் டூ செல்ல உள்ளார். இவர் தனது மாமா வீடான புலிவலம் கிராமத்திற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த ஜனனியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தை தடுக்க சென்ற பிளஸ் -1 மாணவியான இலட்சியா என்பவரும் காயம் அடைந்தார்.
இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?

காயமடைந்த லட்சியாவை உறவினர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதலை ஏற்க மறுத்ததால் திருவள்ளூர் மாவட்டம் கே ஜி கண்டிகையை சேர்ந்த இளைஞர் ஜனனியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்க லிமிட் இல்ல... சரணடையச் சென்ற கொலைகாரனை அலைக்கழித்த போலீஸ்.. அதிர்ச்சி சம்பவம்!