தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. பருவமழையானது வழக்கமான ஜூன் மாதம் தொடக்காமல் அதற்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

அதன்படி, கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இடையிடையே தமிழகத்தின் சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், தூத்துக்குடி என பரவலாக மழை பெய்தது. பின்னர் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி எடுக்கிறது. நேற்றும் தமிழகத்தில் மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதையும் படிங்க: மக்களே உஷார் ! நீலகிரியை புரட்டி எடுக்கும் மழை...#REDALERT கொடுத்த வானிலை மையம்...
சென்னையிலும் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஈரோடு, தேனி, கிருஷ்ணகிரி, நெல்லை, தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: #RED ALERT: கோவை, நீலகிரிக்கு அதிகனமழை பெய்யும்...எச்சரிக்கும் வானிலை மையம்!