வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தது. இன்றுடன் வாக்காளர் திருத்த பணிகள் முடிவடைகிறது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட ஷாக்...!! எஸ்.ஐ.ஆர். மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்... பகீர் கிளப்பும் அண்ணாமலை...!
இந்த நிலையில், புதுக்கோட்டையில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரட்டை பதிவு முகவரி மாற்றம் செய்தவர்களின் பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 640 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் 12.53 லட்சம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செத்துப் போயிட்டோமா? உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக S.I.R. லிஸ்ட்... நாதக பகீர் குற்றச்சாட்டு...!