தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக, அண்ணாமலை, கூட்டணி அரசு அல்ல தமிழ்நாட்டில் பாஜக அரசு அமையும் என்று கூறினார், அவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில் அண்ணாமலை சர்ச்சை கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெறுகிறது. அதிமுக பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா சொன்னதுதான் அதிகாரப்பூர்வமான கருத்து. தமிழகம் என்று வரும்போது நயினார் நாகேந்திரன் சொல்வதுதான் கட்சியின் கருத்து. அண்ணாமலை சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டார். சகோதரர் அண்ணாமலை தெளிவாகச் சொல்லிவிட்டார் அது தனது சொந்த கருத்து என்று சொல்லிவிட்டார். கட்சியின் கருத்தாக இருந்தால் தான் நமது பதில் சொல்ல வேண்டும். அதைச் சொந்த கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரபூர்வ தலைவர்கள் கூறுவதுதான் அதிகாரபூர்வ கருத்து.
இதையும் படிங்க: டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

அண்ணாமலையின் கருத்தை எதிர்க்கட்சிகள் தான் திரித்து வெளியிட்டன. தெளிவாக ஒரு கூட்டணி அமைத்து அதற்காக தெளிவான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிவிட்டார். இது கூட்டணி கட்சி சார்ந்த மற்ற தலைவர்களுக்கும் தெரியும். கூட்டணி தர்மம் மற்ற தொண்டர்களுக்கும் தெரியும். அதனால தேசிய ஜனநாயக கூட்டணி அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றால் போல கூட்டணி அமைத்து செயல்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும். அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக மற்றவர்கள் எல்லாம் மரியாதை குறைவாக இல்லை.

மற்ற தலைவர்களை மரியாதை குறைவாக நடத்தவும் இல்லை. ஒரு கட்சியில் புதிய தலைவர் நிர்வாகம் வந்தது என்றால், எல்லாமே மாறும். பழைய நிர்வாகத்தினர் அகற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் வருவார்கள். ஒரு கட்சி தலைவர் கட்டமைப்பு அப்படி. ஒரு தலைவர் வந்தால் நிர்வாகம் முழுவதும் மாறும். செயற்குழு உறுப்பினர்கள் மாறுவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மாறுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதால் அவர்களல்லாம் மாறுவார்கள். ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதத்தில் பேசுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக. அதனுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம். எல்லா கூட்டணியும் கட்சியினரும் சேர்ந்தே செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை