இந்தியாவில், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மேற்கொள்கிறது. இந்தச் செயல்முறையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவது, மற்றும் பிழைகளைத் திருத்துவது ஆகியவை அடங்கும். இந்தத் திருத்தம் தேர்தல்களின் நேர்மையை உறுதி செய்ய முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2025-இல், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு முன்னெடுத்த பணிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தலித், மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அப்போது, பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தெரிவித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல நோட்டீஸ் கொடுத்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர் கட்சி உறுப்பினர்கள் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் சிறப்பு திருத்தம் மிகவும் அவசியமானது என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழி இல்லை என வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலி வாக்குகள் புழங்கணுமா? நல்லா சிந்திச்சு பாருங்க.. தேர்தல் ஆணையம் பதிலடி..!
தங்கள் கூட்டணி தேர்தலை புறக்கணிக்கவே வாய்ப்புள்ளது என கூறினார். பழைய வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை சுட்டிக்காட்டி பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்..! மறுக்கும் அரசு.. மடைமாறாத எதிர்க்கட்சிகள்..!