பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தில், உணவு சாப்பிட்டுக்கொண்டே ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.

இதனை கண்ட பயணிகள் சிலர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுக்குறித்து மற்ற பயணிகள் ஓட்டுநரிடம் கேட்ட போது, அவர் சரியான நேரத்துக்கு பேருந்தை இயக்க வேண்டும் என்பதால் சாப்பிடாமல் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

மேலும் நள்ளிரவில் பசித்தது என்றால் இப்படித்தான் சில நேரங்களில் சாப்பிட்டுக் கொண்டே பேருந்தை இயக்குவேன் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதை அடுத்து இப்படி பொறுப்பின்றி செய்வது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளனர்.

மேலும் பயணிகளின் உயிரை பொருட்படுத்தாமல் பேருந்தில் உணவு அருந்தியபடி ஓட்டிய டிரைவர் மற்றும் அந்த பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் "பளார்" அறை விட்ட மனைவி! ஹாய் காட்டி மழுப்பிய சம்பவம்...