பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தற்போது இந்த மோதல் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் விதமாக உச்சத்தை எட்டியது. அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்திருந்த நிலையில் இன்று கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் அன்புமணி சந்தித்த ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்று உள்ளனர். அதில் கட்சியின் பொருளாளராக உள்ள திலகபாமாவும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாமகவின் பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை அதிரடியாக ராமதாஸ் நீக்கியுள்ளார்.
இதையும் படிங்க: அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!

அவருக்கு பதிலாக சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக திலகபாமா மீது கடும் கோபத்தில் இருந்த ராமதாஸ் அவரை சந்திக்க கூட மறுத்துவிட்டார். தற்போது மேலும் அந்த கோபத்தை அதிகரிக்கும் வகையில் அன்புமணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பொருளாளர் பதவியை பறித்துள்ளார் ராமதாஸ்.
இதையும் படிங்க: அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த ராமதாஸ்.. அன்புமணி மீது இன்று பாயப்போகும் அம்பு..!