திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சி சார்பாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டவர். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதியருக்கு ரித்தன்யா என்ற மகளும் மிதுன் ஆதித்யா என்ற மகனும் இருந்தனர். மகள் ரித்தன்யாவிற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி சித்ராதேவியின் மகன் கவின் குமாருடன் வரண் பேசி முடிக்கப்பட்டது.

கவின் குமாருக்கும் ரித்தன்யாவிற்கும் கடந்த 11.04.2025 அன்று திருப்பூரில் வெக விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து அவிநாசியை அடுத்து பழங்கரையில் உள்ள வீட்டில் புதுமண தம்பதியர் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று பிற்பகல் அவிநாசியை அடுத்த சேயூர் அருகே மொண்டிப்பாளையம் செல்லும் வழியில் செட்டிப்புதூர் பகுதியில் சாலையோரம் காருக்குள் ரித்தன்யா வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் ரித்தன்யாவின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "லாக் அப் டெத்" ...விளைவு மோசமா இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!
சம்பவ இடத்திற்கு வினைந்து வந்த சேயூர் போலீசார் காரில் இருந்த ரித்தன்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரித்தன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தை அண்ணாதுரைக்கு உருக்கமாக பேசி வாட்ஸ் அப்பில் பல ஆடியோக்களை அனுப்பி இருந்தார். அந்த ஆடியோவில், போலீசோ வேற யாராச்சும் வந்து ஏதாவது சொன்னா நீங்க யாருக்காகவும் தலைக்குனிய வேண்டாம். இத போட்டு காமிச்சிருங்க ஏன்னா அவங்க இதுதான் சாக்குன்னு உங்களை இன்னும் அசிங்கப்படுத்த நினைப்பாங்க இதை யாரு முன்னாடி வேணாலும் போட்டு காமிச்சிருங்க.

அந்த ஆடியோக்களில் கணவன் கவின்குமார் தன்னை உடல் ரீதியாக கடுமையாக சித்திரவதை செய்வதாகவும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து மனரீதியாக கடுமையாக சித்திரவதை செய்வதாகவும் எனது இந்த முடிவிற்கு எனது கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர்தான் காரணம் அவர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார். என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் உண்மையான காரணமே, அவங்களும் அவங்க குடும்பமும் தான் காரணமே. போது உடல் ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சுட்டேன் மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சுட்டேன். எனக்கு இது வேண்டாம். இந்த லைப் அதெல்லாம் அவங்க மாற மாட்டாங்க. என்னோட இந்த முடிவுக்கு கவினும் ஈஸ்வரமூர்த்தியும் சித்ராதேவியும் தான் காரணம். என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு. என்ன மன்னிச்சிருங்கப்பா. என்ன மன்னிச்சிருங்கம்மா.
முன்னதாக ரித்தன்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது கணவர் கவின் குமார் வீட்டில் வைத்து தான் செய்த டார்ச்சர்கள் குறித்து வெளியில் சொன்னால் அவமானத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரித்தன்யா சேயூர் சென்று அங்கு தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை வாங்கி வந்து மொண்டிப்பாளையம் செல்லும் வழியில் காரில் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. திருமணமாகி 78 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருப்பூர் ஆர்டிஓ மோகனசுந்தரம் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்து வெளியே வந்த கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை ரித்தன்யாவின் தம்பி மிதுன் ஆதித்யா மற்றும் உறவினர்கள் ஆத்திரத்துடன் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடமிருந்து தப்பித்து மூவரும் காரில் ஏறி அரசு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் சென்ற காரை உறவினர்கள் தட்டி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி அவிநாசி சத்திசாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர்.
இதையும் படிங்க: என் பிள்ளைய அனாதை பிணம் போல வெச்சிருக்காங்க! 7 வயது சிறுவன் மர்ம மரணம்.. கதறும் பெற்றோர்!