திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் அக்ரி காமராஜ். இவர் விசிக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக இருந்தவர்.

இவர், நாயுடு மங்கலம் ரயில்வே கேட் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்ரி காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

முன்விரோதம் காரணமாக அவர் கோலி செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகொலையில் தொடர்புடையவர்களை தேடி வரும் கலசப்பாக்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?