அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சென்னை விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டி உள்ளார்.
இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டார்.பல்வேறு மாநில அரசுகள் தங்களது விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தானாக முன்வந்து மத்திய அரசைக் கோருவது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதே சரியான அணுகுமுறை என்றும், பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோருவது சரியல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் மாற்றும்போது லாபமே முதன்மை நோக்கமாக மாறிவிடும் என்றும், அதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமை ஏற்படக்கூடும் என்றும் தினகரன் எச்சரித்தார். எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமருக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் உண்மை இருப்பின், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தொடரும் மின்வெட்டு..! தத்தளிக்கும் தமிழகம்... வலுக்கும் கண்டனம்..! கொந்தளித்த TTV.!!.