பிறந்து 6 நாளான பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்கு போடப்பட்ட ஊசியை மாற்றும் போது கட்டைவிரலை கட் செய்த செவிலியர்.

வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24 ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி... சேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு...!

இந்நிலையில் இன்று குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்ற இருந்த ஊசியைசெவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை கைகளினால் பிரித்து எடுக்காமல் கத்தரிக்கோளை பயன்படுத்தி கட் செய்யும் போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டைவிரல் துண்டாகியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாமகவால் தேமுதிகவிற்கு அடித்த ஜாக்பாட்... திடீர் மனமாற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!