மாமல்லபுரத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய போது மக்களாட்சி குறித்தும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதை பற்றியும் பேசினார். மக்களாட்சி ஒன்று இருந்தால் தான் இந்த உலகத்தில் உள்ள அத்தனை துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும். அது மட்டுமல்ல ஒரு முறையான மக்களாட்சி இருந்தாலே போதும் எல்லாருக்கும் எல்லாமே சமமாக கிடைக்கும் என்பதை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லுங்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர்களை ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்ற சொல்லுங்கள்.

ஜனநாயகம் கடமையை செய்வது பெரிய விஷயம் அல்ல. நல்லவர்கள், நம்பிக்கையானவர்களை இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்கள் யார் என்று பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள்., அவ்வளவுதான் சிம்பிள் என தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசிய போது, காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை தவிருங்கள் என தான் கூறியதாகவும், நீங்கள் பாருங்கள் அடுத்த வருடம் என்ன நடக்கப்போகிறது என்று... அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள்., அது உங்களுடைய பணம் தான் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் மட்டும் தான் உலகமா? சிந்தித்து செயல்படுங்கள்... மாணவர்களுக்கு விஜய் அறிவுரை

என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு சரியாக தெரியும் என்று பேசிய விஜய், அது நான் சொல்லி தான் புரிய வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை., பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் குழந்தைகளுடைய விஷயத்தில் அழுத்தம் கொடுக்காதீர்கள்., அனைத்தும் தெரிந்து கொண்டு வழி நடத்துங்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: லவ் யூ அண்ணா..! அரங்கம் அதிர விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய்.. மாணவர்கள் உற்சாகம்!!