10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்தினார்.

அப்போது, உங்களுடைய சாதனைகளுக்கு வாழ்த்துக்கள். படிப்பில் சாதிக்க வேண்டும் தான்., படிப்பும் சாதனை தான் அதற்காக குறிப்பிட்ட படிப்பில் மட்டும் நம் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பது சாதனை அல்ல., ஒரே விஷயத்தை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என பேசினார்.
இதையும் படிங்க: லவ் யூ அண்ணா..! அரங்கம் அதிர விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய்.. மாணவர்கள் உற்சாகம்!!

ஏனென்றால் நீட் மட்டும்தான் உலகமா? நீட்டைத் தாண்டி இந்த உலகம் மிக மிக பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் உண்டு. அதனால் இப்போதே உங்கள் மனதை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.
இதையும் படிங்க: உற்சாகமாக தொடங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..! த.வெ.க தலைவர் விஜய் வருகை..!