10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருதுகளை வழங்கி வருகிறார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஜய், போதைப் பொருள்களை ஒதுக்கி வைப்பது போல சாதி மதங்களையும் ஒதுக்கி வையுங்கள் என தெரிவித்தார். பெரியாருக்கும் சாதி சாயம் பூசுவதாக குற்றம் சாட்டிய விஜய், சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயத்தை பூசுகிறார்கள் என்றும் இதை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவார்கள்! மக்களாட்சி முக்கியம்... ஓட்டுக்கு காசு குறித்து விஜய் தாக்கு!

இந்த உலகத்தில் எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து பார்த்தாலே தெரியும்., குழப்பம் இல்லாத வாழ்க்கை வாழலாம் என்ன பேசிய அவர், எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா., எவ்வளவோ பாத்துட்டோம்., இத பாக்கட்டுமா என்று பாஸிட்டிவாக கான்ஃபிடன்ட்டோட இருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: நீட் மட்டும் தான் உலகமா? சிந்தித்து செயல்படுங்கள்.. மாணவர்களுக்கு விஜய் அறிவுரை..!