2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 3ம் தேதி முடிவடைந்தது. 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சீசனில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி, இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, தான் தேர்வு செய்த பிளேயிங் 11-ஐ அறிவித்துள்ளார். தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சாய் சுதர்சன் இத்தொடரில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றவர். விராட் கோலி இந்த தொடரில் அபாரமாக விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க: அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!
மூன்றாவதாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் இடம் பிடித்திருக்கிறார். ஆகாஷ் சோப்ரா முதலில் ஹென்றிச் கிளாசனை சேர்ப்பதா அல்லது பட்லரை சேர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்ததாகவும் பின்னர் பட்லர் குஜராத்தின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்ததால் அவரை தேர்வு செய்ததாக கூறினார். நான்காவதாக ஸ்ரேயாஸ் ஐயர், ஐந்தாவதாக சூர்யகுமார் யாதவ், ஆறாவதாக சிஎஸ்கே வீரர் பிரவீசையும் தேர்வு செய்துள்ளார்.

பந்து வீச்சில் முதலில் குர்னால் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஜஸ்பிரித் பும்ரா, நூர் அகமது, ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை ஆகாஷ் சோப்ரா தனது சிறந்த பிளேயிங் 11ல் தேர்வு செய்து இருக்கிறார்.
ஆனால் சுப்மன் கில், பில் சால்ட் ஆகியோரை அவர் தேர்வு செய்யவில்லை. அத்துடன் மிட்செல் மார்ஷ், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிங்க: என்ன பாராட்டு மழைடா யப்பா..! ஆர்சிபி அணியை படைபலத்துடன் சென்று வரவேற்ற டி.கே சிவக்குமார்..!