சென்னை விமான நிலையம், ஒன்றிய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், அதனை தனியாருக்கு தாரைவார்க்க உதவும் வகையில் தவெக அரசு தற்போது செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோருவதன் மூலம், சென்னை விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும் நிலை ஏற்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தவெக அரசு ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது பெரும் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் புதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அடிதூள் அறிவிப்பு... விவசாயிகளுக்காக சொன்னதை செய்து காட்டிய விஜய்...!
தவெக அரசின் இந்த நடவடிக்கையால், அதன் ஆதரவுக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவார்க்க தவெக அரசு உதவுவதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெக அரசின் கோரிக்கையால் சென்னை விமான நிலையம் அதானி அல்லது ஜிஎம்ஆர் நிறுவனங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே மும்பை, அகமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்கள் அதானி நிறுவனத்தின் வசம் உள்ளன.
பாஜக அரசின் திட்டத்துக்கு தவெக அரசு துணை போகிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை மத்திய அரசின் விமான நிலைய ஆணையம் தற்போது நேரடியாக நிர்வகித்து வருகிறது. இந்த சூழலில், அடுத்தடுத்து விமான நிலையங்களை தனியாருக்கு வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அந்தக் கடிதத்தில் அவர் முன்வைத்துள்ளார்.
இதன் மூலம், சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு மாற்ற தவெக அரசு திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையம் தற்போது ஒன்றிய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரைவார்க்க தவெக அரசு உதவுகிறது என்ற கருத்தும் தற்போது முன்வைக்கப்படுகிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தை மாற்றக் கோருவதால், விமான நிலையம் தனியார் மயமாகும் சூழல் உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை மத்திய அரசின் விமான நிலைய ஆணையம் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் நிர்வகித்து வருகிறது. அடுத்தடுத்து விமான நிலையங்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில்தான், சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கடிதம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளார்.
வழக்கமாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தவெக அரசு விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி கடிதம் எழுதியிருப்பது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு விஜய் எழுதும் கடிதங்கள் உடனுக்குடன் வெளியாகும் நிலையில், விமான நிலையம் தொடர்பான இந்தக் கடிதம் மட்டும் வெளியாகவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தக் கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எழுதிய இந்தக் கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், இது தொடர்பாக அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கை கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருந்தார் என்பதே தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் தொகுதியில் இப்படியா?... கொதித்தெழுந்த பெரம்பூர் மக்கள்... நடுரோட்டில் ஆவேசம்...!