தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ்ஐஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர்.

அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தமிழ், தமிழர் களத்தில் தீயாய் செயல்பட்டவர்... மறைந்த இயக்குனர் வி. சேகருக்கு சீமான் புகழ் வணக்கம்...!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார். வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துவண்டு போன ஒப்பந்த தொழிலாளர்கள்… செவி சாய்க்காத துயரம்… சீமான் காட்டம்…!