திருவனந்தபுரம் விமான நிலையம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளை வழங்குகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு, மாலத்தீவு, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது கோவளம் கடற்கரை மற்றும் பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. 1932-ல் தொடங்கப்பட்ட இது, இந்தியாவின் முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் ஒன்று. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், அரபிக்கடல் அருகே அமைந்துள்ளதால், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு முக்கிய இணைப்பு மையமாக உள்ளது.

பன்னாட்டு விமான நிலையங்களில் முதல் சூரிய மின்சாரத்தால் இயங்கும் விமான நிலையமாக 2015-ல் பெயர் பெற்றது. மேலும், மாலத்தீவு, இலங்கை, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகிறது. அரபிக்கடலோரத்தில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையில் உள்ள மீனவ கிராம பகுதியில் இருக்கிறது. இதனால் இந்த விமான நிலையத்திற்கு மீன்களை இரையாக தேடிவரும் பறவைகளால் தொல்லை அதிகம். விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போதும், விமானங்கள் வந்து இறங்கும் போதும் சுற்றித்திரியும் பறவைகளால் தினமும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நடுக்கடலில் அதிர்ச்சி: பற்றி எரிந்த சரக்கு கப்பல்.. மாலுமிகளின் நிலை என்ன?

இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்தில் பறவைகள் மோதி 10 விமானங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க செய்து பறவைகளை விரட்டியடித்து வருகின்றனர். விமானங்கள், தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் முன்பு இந்த பட்டாசுகள் வெடிக்கப்படும். மேலும் வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும் சில நேரங்களில் பயன்படுத்தப் படுகிறதாம். ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிப்பதற்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு சராசரியாக 12 கோடி ரூபாயை பட்டாசுகள் வெடிக்க திருவனந்தபுரம் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது. பட்டாசு வெடிக்கும் பணிக்கு 24 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பறவைகள் அட்ராசிட்டிக்கு 12 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: ஜூன் 19ல் இடைத்தேர்தல்.. தொகுதிகளை பட்டியலிட்டு வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!