எப்பொழுதுமே நடிகர் சந்தானத்தின் திரைப்படம் என்றால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமே எனலாம் காரணம் அவர் படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அவருக்கு துணையாக எப்பொழுதும் மொட்டை ராஜேந்திரன் இருப்பார். எப்படி 80 கால சினிமாவில் செந்தில் கவுண்டமணி இருந்தார்களோ தற்பொழுது சந்தானம் இருந்தால் கண்டிப்பாக அங்கு மொட்டை ராஜேந்திரனும் இருப்பார் என்ற பேச்சுக்களும் அதிகமாக எழுந்துள்ளது.

அந்த அளவிற்கு நடிகர் சந்தானத்தின் திரைப்படம் வந்தால் அதில் சென்டிமென்ட் காட்சிகளும் காதல் காட்சிகளும் இருப்பதைவிட அதிகமாக காமெடி காட்சிகளே இருக்கும். அதனாலேயே தனது வாழ்வில் சோகத்தில் இருப்பவர்கள் கூட சந்தானம் படத்திற்கு சென்று மகிழ்ச்சியோடு திரும்பி வரும் காட்சிகளை நாம் அனைவரும் கண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட நடிகர் சந்தானத்தின் "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது.
இதுவரை தனது படத்தை பார்க்க பல ஆடியன்ஸ்களை கைகளில் வைத்திருந்த சந்தானத்தின் இந்த திரைப்படத்தைக் காண கூட்டங்கள் குறைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு முன்பாக வெளியாகி இருந்த 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் சந்தானம் எதற்காக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை இப்படி சொதப்பி வைத்திருக்கிறார் என அனைவரும் கேள்வியும் கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் வயிறு குலுங்க சிரிக்க ரெடியா..!! ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது டிடி நெக்ஸ்ட் லெவல்..!

அத்திரைப்படத்தில் சென்னை பாஷையை வைத்து அவர் பேசுவதும் ஒரு பக்கம் புரியாமல் படத்தின் முதல் பாகத்தின் முடிவு முதல் இரண்டாம் பாகம் தொடக்கத்தில் இருந்து பாதி வரைக்கும் எந்த காமெடிகளும் இல்லாமல் படம் சொதப்பலாகவே இருந்தது. ஆதலால் சந்தானத்தின் இந்த திரைப்படம் அவருக்கு தோல்வியை கொடுத்தது. ஆனாலும் கடைசியில் ராஜேந்திரனால் படம் ஓடியது என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் தான் தமிழ் திரையுலகில் 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' ஆக வலம் வரும் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மீண்டும் ஹிட் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு வெளியான இத்திரைப்படத்தை திரையில் காண அனைவரும் ஆவலுடன் தியேட்டருக்குள் சென்றனர். பின் ஆவலாக படத்தைப் பார்க்க சென்ற அனைவரும் திரும்பி வரும்பொழுது சோகத்தோடு வந்தனர். அவர்களிடத்தில் படம் எப்படி உள்ளது என கேட்டால் அவர்கள் ஏன் இப்படி ஒரு படத்தை மணிரத்தினம் எடுத்தார் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பின்பாக நடிகர் சிம்புவுக்கும் சில வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் நடிகர் சந்தானம் மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து நடித்த சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'மதகஜராஜா' திரைப்படத்தை பார்த்த மக்கள் அனைவரும் மீண்டும் நடிகர் சந்தானம் ஹீரோக்களுடன் இணைந்து காமெடி காட்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் சந்தானம் காமெடியனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தான் நடிக்கும் இனிப்பு செய்தியை செய்தியாளர்கள் மத்தியில் சமீபத்தில் கூறியிருந்தார் நடிகர் சந்தானம். அவர் கூறுகையில், நான் 'STR 49' திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். காரணம், திடீரென ஒரு நாள் சிம்புவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. என்னவாக இருக்கும் என நினைத்து பேசியபோது, என்னுடைய அடுத்த திரைப்படத்தில் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார்.

என்னால் சிம்புவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் என் சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் சிம்பு எனக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார். நான் STR 49 படத்தில் நடிக்கும் அதே நேரத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன், ஆனால் இந்த படத்தில் நடிப்பதால் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளேன். இதனால் அந்தப்பட தயாரிப்பாளரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். STR 49 படத்தில் எங்கள் இருவரின் காம்போ நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பிரம்மாதமாக இருக்கும்" என தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில், படம் தயாராகும் வேளையில் டான் பிக்சர்ஸின் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர், விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன். தற்பொழுது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர். ஏனெனில் இவரது டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இவர்களது மூன்று பேரின் படங்களையும் தயாரித்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 ஆகிய மூன்று படங்களையும் இந்நிறுவனம் மட்டுமே தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் அமலாக்க துறையின் விசாரணையால் படத்தின் தயாரிப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக படக்குழுவினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: மாமன் படத்தால் படுதோல்வியடைந்த 'DD Next level'...! வசூலை கண்டு வேதனையில் ஆர்யா, சந்தானம்..!