தமிழ் திரை உலகில் உள்ள இயக்குனர்களில் மக்கள் மனதை வென்றவர் என்கிறார் அவர்தான் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். ஏனெனில் இவர் இயக்கிய முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இப்படிப்பட்ட சுகுமாரன், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மேலும், பிரபல இயக்குனரான வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மதுரை வட்டார மொழி பயிற்றுநராக நடித்திருந்ததோடு படத்தின் பல வசனங்களையும் எழுதி அற்புதப்படுத்தியவர்.

இதனை அடுத்து, நடிகர் கதிர், ஓவியா, கலையரசன், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து இயக்கி அற்புதமாக வெளியான திரைப்படம் தான் 'மதயானை கூட்டம்'. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படிப்பட்ட அற்புதமான திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். ஆனால் இப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் முயற்சியை கைவிடாத சுகுமாரன், பல ஆண்டுகள் கழித்து 'இராவண கோட்டம்' என்ற திரைப்படத்தை நடிகர் சாந்தனுவை வைத்து இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் பெரியதளவில் ஓடவில்லை. ஆயினும் மனம் தளராத அவர் தனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

பின்பு ஒருநாள் தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், 'தன் மீது சாதிய முத்திரை குத்தப்பட்டதாகவும் ஒரு நடிகர் தனக்கு துரோகம் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மதயானை கூட்டம் திரைப்படத்திற்கு பின்பு தனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என யோசித்த பின்பு தான் தனது வாய்ப்புகளை எல்லாம் ஒருவர் திருடிக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தேன் என்று கூறி இருக்கிறார். நான் அறிமுகப்படுத்திய கதாநாயகன் என் முதுகிலே குத்துவான் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று வேதனைப்பட்டார்.

இப்படி பல வேதனைகளை சுமந்த சுகுமாரன், மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். அப்பொழுது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட, அங்கிருந்து மக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். இப்படி தன் வாழ்க்கையில் பல கடினமான பாதைகளை கடந்து வந்த விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பல திரையுலகினார்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்க, இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் "பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா சாரிடம் நான் வேலைப்பார்த்து கொண்டிருக்கும் பொழுது தான் விக்ரம் சுகுமாரன் எனக்கு பழக்கம். அவருடைய மரணம் எனக்கு மிகுந்த வலியையும் வேதனையும் அளிக்கிறது. மக்களுக்கு பிடித்தபடி நிறைய நல்ல திரைப்படங்களை சினிமாவில் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்" என கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகை விஜி சந்திரசேகர் "இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடைய இறப்பு செய்தியை கேட்டு அதிர்ந்துபோனேன். எனக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்து கொடுத்த திரைப்படம் என்றால் அது அவர் இயக்கத்தில் உருவான மதயானை கூட்டம் திரைப்படம் தான். அடுத்தாண்டு ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க இருப்பதா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தன்னிடம் போனில் மகிழ்ச்சியாக பேசினார். என்னால் இப்பொழுது வரை நம்பமுடியவில்லை அவர் இறந்துவிட்டார் என்று. அவர்கள்து குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹீரோயின்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ரசிகர்களை கண்டபடி திட்டிய நித்யா மேனன்..!