திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காத என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
"திராவிட மாடல் ஆட்சியைத் தொடர வேண்டும், தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும், அது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய தகவல்களின்படி, தேமுதிகவுக்கு 6 முதல் 7 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு, ஒரு ராஜ்யசபா இடமும் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கட்சிக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அரசியலில் நடக்கும் அதிசயம்..!! 10 வருஷத்துக்கு முன் கலைஞர் சொன்ன அந்த வார்த்தை..!! இப்போது சாத்தியமானது எப்படி..??
இதனிடையே, தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. அதனால், கேப்டன் விஜயகாந்த்- கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக என்று கூறியுள்ளது. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் தானும் போட்டி..!! விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா திட்டவட்டம்..!!