நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு.கைதி சபரி வர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்து சென்று அவரை வார்டன் தாக்கியது விசாரணையில் அம்பலம்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர், ஈத்தங்காடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தென்தாமரைக்குளம் காவல்துறையினர் சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து, சபரிவர்மனை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்,கடந்த 13-ம் தேதி சிறையில் சபரிவர்மன் சிறையில் வார்டன்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறையில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதேபோல், நீதிபதி சத்தியமூர்த்தியும் விசாரணை மேற்கொண்டார். பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: "மூக்கில் ரத்தம்... உடல் முழுக்க காயம்..! சபரி வர்மனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதிர்ச்சி தகவல்கள்..!!
விசாரணையில், சிறைக்காவலர்கள் மற்றும் சில கைதிகள் இணைந்து சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியது உறுதியானது. இதையடுத்து, நேசமணிநகர் காவல்துறையினர் சிறைக்காவலர்கள் (வார்டன்கள்) ஜெகன், சுரேஷ், சிவக்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும், இக்கொலைக்குத் துணையாக இருந்த விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகளும் கைது செய்யப்பட்டனர். கைதிகள் 8 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 3 வார்டன்களும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த வழக்கை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி. கலையரசன், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சபரி வர்மனின் குடும்பத்தினரிடம் முதலில் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சபரி வர்மன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்து சென்று அவரை தாக்கியதும்,பின்னர் உயிரிழந்த அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
வழக்கமாக சிறைகளில் கைதிகள் மாலை 5 மணிக்கு கைதி சிறை அறையில் அடைக்கப்பட்டால் மறுநாள் காலை 5 மணிக்கு வரை அவர்களது அறையை திறக்கவேண்டும் என்றால் அதற்கான பதிவேட்டில் அறையை திறப்பவர் கையெழுத்திட வேண்டும் என்ற நடை முறை உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் சபரி வர்மன் அடைக்கப்பட்ட சிறை அறையின் கதவை திறக்க சாவியை எடுக்கும்போது அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சபரி வர்மன் கொலை வழக்கில் செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டுள்ள 8 கைதிகளிடமும் தனி தனியாக விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து 8 பேரும் தனித்தனியே அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.சம்பவம் நடந்த அன்று சபரி வர்மனுடன் ஜெயிலில் இருந்த கைதிகள் மற்றும் வேறு அறையில் இருந்த 25 -க்கு மேற்பட்ட கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிறை காவலர்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சிறையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்விற்கு உட்படுத்தினார்கள். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய 8 கைதிகளை வேறு ஜெயிலுக்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!