இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கான பெருமையை தட்டிச் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்றாவது முறையாக முயற்சித்துள்ளார். அவர் இதுகுறித்து, 'நான் இரு நாடுகளிடமும் சொன்னேன். வாருங்கள், நாங்கள் உங்களுடன் நிறைய வணிகம் செய்ய விரும்புகிறோம். இந்த மோதலை நிறுத்துவோம். நீங்கள் அதை நிறுத்தினால் நாங்கள் உங்களுடன் வணிகம் செய்வோம். நீங்கள் அதை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் உங்களுடன் வணிகம் செய்ய மாட்டோம் எனக் கூறினேன். உடனடியாக பாகிஸ்தானும் இந்தியாவும் நிறுத்திவிட்டார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

'சனிக்கிழமை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உடனடி போர் நிறுத்தத்தை ஏற்படுத்த எனது நிர்வாகம் உதவியது. அது ஒரு நிரந்தர போர் நிறுத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இரு நாடுகளிடமும் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளன.

வர்த்தக ராஜதந்திரம் இந்த முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை அசைக்க முடியாததாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்... அவர்கள் உண்மையில் நிலைமையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்
.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தலைவர்களின் அணுகுமுறையும் நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொள்வதில் உறுதியாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் இருந்தது என்று நான் பெருமைப்படுகிறேன். அமெரிக்கா அமைதியை மீட்டெடுப்பதில் பெரும் பங்கு வகித்தது. வர்த்தகத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது. 'நாங்கள் நிறைய உதவி செய்தோம், வர்த்தகத்தின் மூலமும் உதவினோம். நான் அவர்களிடம் சொன்னேன்.

நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தினால், நாங்கள் வர்த்தகம் செய்வோம். சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்கள் இருவருடன் வர்த்தக உறவை துண்டித்துவிடுவேன் என இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடம் கூறினேன். அவர்கள் உண்மையிலேயே போரை நிறுத்த சம்மதித்தார்கள்.
"இது ஒரு மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதனால் நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்.''எனத் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
இதையும் படிங்க: போர் நிறுத்த அறிவிப்பை ட்ரம்ப் ஏன் வெளியிடணும்.? புரியாத புதிரா இருக்கே.. கேள்வி எழுப்பும் திருமாவளவன்!