கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகள் ஆகியும் நீடித்து வருகிறது. நேட்டோவில் இணையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா இந்த போரை தொடுத்த நிலையில் இரு நாடுகளுக்கும் தொடர்ந்து நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் நிபந்தனைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் விமானப்படைக்கு சொந்தமான 40 போர் விமானங்கள் தகர்க்கபட்டதாக கூறப்பட்டது. உக்ரைனில் இருந்து சுமார் 4,300 கிமீ தூரம் உள்ள ரஷ்யாவின் இர்குட்ஸ் ஒப்லாஸ்டின்பேலயா மீது இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: கீவ் நோக்கி வீசப்பட்ட ட்ரோன்கள்.. ரஷ்யா நடத்திய மிகப்பெரிய அட்டாக்..!

இந்த தாக்குதலால் ரஷ்யா மிகவும் கோபமடைந்துள்ளது. இதற்கிடையே துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று நடந்தது. முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி இருந்தார்.

உக்ரைன் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிலையில், நிபந்தனை இல்லாத முழுமையான போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில் இந்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.
இதையும் படிங்க: திக்.. திக்.. நொடிகள்.. திடீர் டிரோன் அட்டாக்.. வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்...!