மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எண்ணெய் சந்தை பெரும் அதிர்ச்சியை சந்தித்து வருகிறது. ஈரான் பதிலடி தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.
இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி பாதையாகும். இதன் வழியாக உலகின் 15 சதவீத கச்சா எண்ணெயும், 20 சதவீத திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியும் நடக்கிறது.
ஆய்வு நிறுவனமான வுட் மெக்கென்ஸி (Wood Mackenzie) தனது அறிக்கையில், "ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து விரைவில் மீண்டும் தொடங்காவிட்டால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டும்.
இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதலால் பலத்த சேதம்!! மூடப்பட்டது சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
தற்போதைய சூழலில் 100 டாலருக்கு மேல் உயர்வு சாத்தியம்" என்று எச்சரித்துள்ளது. ஜலசந்தி மூடல் நீடித்தால், OPEC+ நாடுகளின் கூடுதல் உற்பத்தி திறன் கூட பயன்படுத்த முடியாது. இது இரட்டை விநியோக அதிர்ச்சியை (dual supply shock) ஏற்படுத்தும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்கனவே ஜலசந்தி அருகே மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதால், டேங்கர் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. கப்பல் காப்பீட்டு செலவுகள், சரக்கு கட்டணங்கள் வேகமாக உயர்ந்துள்ளன. இவை இறுதியில் எண்ணெய் விலையில் சேர்ந்து, உலகளாவிய பணவீக்கத்தை தூண்டும்.

தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70-80 டாலர் வரம்பில் உள்ளது. ஆனால் ஜலசந்தி மூடல் நீடித்தால், ரஷ்யா-உக்ரைன் போரின் ஆரம்ப காலத்தில் போல 125 டாலரை தொடும் அபாயம் உள்ளது.
இரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஜலசந்தியை "மூடப்பட்டது" என்று அறிவித்து, செல்லும் கப்பல்களை "தீ வைத்து எரிப்போம்" என்று மிரட்டியுள்ளது. இதனால் ஷிப்பிங் நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தி, ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் பாதையை பயன்படுத்தி வருகின்றன. இது போக்குவரத்து நேரத்தை அதிகரித்து செலவுகளை உயர்த்துகிறது.
இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும். உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், ஜலசந்தி திறப்பு எப்போது என்ற கேள்வி மிக முக்கியமாக உள்ளது.
எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்தால், உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதலால் பலத்த சேதம்!! மூடப்பட்டது சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!