மகாராஷ்டிரா மாநிலம் மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சித்தார்த் கார்டன் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, நுழைவு வாயிலில் இருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதேபோல், பகத்சிங் நகரில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒரு பெண் காயமடைந்தார்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து நகராட்சி ஆணையர் ஜி.ஸ்ரீகாந்த் கூறுகையில், சத்ரபதி சம்பாஜி நகரில் பலத்த காற்று மற்றும் லேசான மழை பெய்ததன் காரணமாக, இந்த இரண்டு சம்பவங்கள் நடந்ததாக கூறினார். பகத்சிங் நகரில், ஒரு மரம் வேரோடு சாய்ந்து ஒரு பெண் மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்... தேவேந்திர பட்னாவிஸ் தரமான பதிலடி!!

மேலும், சித்தார்த் கார்டன் அருகே, நுழைவாயிலில் இருந்த ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்து உள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து கூறி இருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிற தளர்வான கட்டிடங்களும் மதிப்பிடப்பட்டு, அடுத்த 7 நாட்களுக்குள் சிறப்பு தணிக்கை செய்யப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!