மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் தான் பாஜக வென்றதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும் இதுக்குறித்து ராகுல் காந்தி கட்டுரை ஒன்றையும் எழுதினார். அதில் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழு அமைத்தல்..மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்தது, வாக்குப்பதிவை அதிகரித்தது, பாஜக வெற்றி பெற வேண்டிய இடத்தில் போலி வாக்குகளை சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்பதற்காக ‛மேட்ச் பிக்சிங்' நடந்ததாகவும், பீகார் சட்டசபை தேர்தலிலும் இது தொடரும் எனவும் கூறினார்.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில், 2023ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டபோது, அப்போதைய மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்வது தவறு. மேலும், இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று எத்தனை கமிஷன்கள் அமைக்கப்பட்டன என்கிற விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். 4.1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது உண்மைதான்.
இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!

அதே நேரத்தில் 18 வயது நிரம்பிய 2.6 கோடி இளைஞர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இதற்கு முன்பு 2004-09 காலகட்டத்தில் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு என்பது 10% ஆகவும், 2009-14 காலகட்டத்தில் 7.5% ஆகவும், 2014-19 காலகட்டத்தில் 6.3% ஆகவும் இருந்தது. எனவே, இந்த எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் தவறாக செயல்படுகிறது என்று சொல்வது சரியல்ல. 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், அது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. கம்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது உண்மைதான்.

ஆனாலும் முந்தைய தேர்தல்களில் பதிவான வாக்குகளை வைத்து பார்க்கும்போது இது வழக்கமான அதிகரிப்புதான். அரசின் திட்டங்கள் மற்றும் பிற காரணங்களாலும் அதிக வாக்குகள் பதிவாகி இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் தேர்தல் நியாயமாகவே நடந்தது என்பது உறுதியாகி உள்ளது. ஒரு சில இடங்களில் புகார்கள் வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், 2024 தேர்தலில் இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இவ்வளவு மோசமாகிட்டியே..! பாகிஸ்தான் ஜிடிபியை (GDP) ‘ஓவர்டேக்’ செய்யும் தமிழகம்..!