காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: பயங்கரவாதம் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்! ஓசாமா பின்லேடன் நியாபகம் இருக்கா? ஜெய்சங்கர் வார்னிங்
இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.
இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான். ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது.

இதெல்லாம் நடந்து ஒரு மாதமான நிலையில், சேதம் அடைந்த விமானப் படை தளங்களை பாகிஸ்தான் ராணுவம் தார்ப்பாய்கள் போட்டு மூடியது. இதன் மூலம் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை, மறைக்க இத்தகைய ஏற்பாடுகளை பாகிஸ்தான் முயற்சிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இப்போது செயற்கைக் கோள் புகைப்படங்களின் வாயிலாக அதன் செயல்பாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் மற்றொரு குட்டும் அம்பலப்பட்டு போனது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை பலரும் கொண்டாடினர். ஆனால் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறிக் கொண்டே இருந்தது. இது பொய்யான தகவல் என்று மத்திய அரசு அப்போதே மறுத்துவிட்டது.

இந்நிலையில் ரபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.
டசால்ட் நிறுவனத்திற்கு இந்திய விமானப்படையிடம் இருந்து போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை. 3 ரபேல் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறானது என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாட்டிக்கிட்டியே பாக்., சேதமடைந்த விமானப்படை தளங்கள் தார்ப்பாய் போட்டு மூடல்.. வெளியானது ஆதாரம்..!