தமிழ்நாட்டு அரசியல் களத்திலேயே இப்போதைக்கு அரசியல் கட்சிகளின் ஒரு பிரைமரி டார்கெட்டாக இருப்பது தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் தான். அந்த வாக்குகளை முழுமையாக பெற்றால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும் என்பதால், திமுக பல தேர்தல்களில் திருமாவளவனை கைக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவித கொடுமைகள் இழைத்தாலும், தனக்கு எம்.பி. பதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் திருமாவளவன் கூட்டணியில் நீடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

திமுக கூட்டணியில் நீடிப்பதால் எந்த போராட்டம் நடத்தவும் அனுமதி கிடைப்பதில்லை என அவரே கூட ஒருமுறை கூறியிருந்தார். இதனிடையே, பறையர் பேரவை என்ற அமைப்பை வைத்து நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் தமிழகத்தில் உள்ள மதுரை, பெரியகுளம், பெரம்பலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும். எம்.பி.யுமான திருமாவளவன் மீது அவதூறு பரப்பி அவரை ஆபாசமாக பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றச்சாட்டினர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு எர்போர்ட் மூர்த்தி மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தனர். அவர் தொடர்ந்து அவதூறு பேசினால் அதற்குரிய பதிலடியை நாங்கள் தருவோம் என விசிகவினர் எச்சரித்தனர்.

ஆனால் மற்றொருபுறம் ஏர்போர்ட் மூர்த்தி இரட்டை மலை சீனிவாசனை முன்னிருந்தி குறிப்பிட்ட சமூதாய மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தி வருவதாகவும், இதை பிடிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஏர்போர்ட் மூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஏர்போர்ட் மூர்த்தியுடனான சண்டையை கைவிடும் படி சீமான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் விசிகவினர் ஏர்போர்ட் மூர்த்தியை போட்டுத்தள்ள திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவுக்கு திருமா வைக்கப்போகும் ஆப்பு... 2026 தேர்தலில் விசிகவின் வேற லெவல் டிமாண்ட்...!
இந்நிலையில் நேற்றிரவு திடீரென சீமான் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார் ஏர்ப்போர்ட் மூர்த்தி. விசிகவினருடனான பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் சீமானிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். தன்னை கொல்ல சதித்திட்டம் திட்டப்படுவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நாம் தமிழர் தம்பிகள் மூலமாக ஏர்போர்ட் மூர்த்தி பாதுகாப்பு வழங்க சீமான் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைக் கேள்விப்பட்டு, விசிகவினர் கொஞ்சம் ஆடி தான் போயிருக்காங்க. ஏன்னா நாம் தமிழர் கட்சியின் படை அப்படிங்கறது, விசிகவை விட 10 மடங்கு 15 மடங்கு வலிமையான படை. சோ, அப்படி இருக்கும் பொழுது இவர்கள் சீமானிடம் அவர்களுடைய வேலையை கட்டினால் என்ன ஆகும் அப்படிங்கறது எல்லாரும் அறிந்ததுதான். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏர்போர்ட் மூர்த்தியை விட்டு தலைதெறிக்க ஓடியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 50 வருஷ வாழ்க்கைய 5 நிமிஷத்துல இழந்துட்டோம்..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமா நேரில் ஆறுதல்..!