திமுகவில் கட்சியை பலப்படுத்தும் வகையில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை திமுக தலைமை அறிவுறுத்தலின் படி தொடங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 20 ஆம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்க பணியை தொடங்குதற்காக, ஒவ்வொரு வீட்டிலயும் திமுக உறுப்பினராக யார் யார் தயாராக உள்ளனர் என்ற விவரங்களை கேட்டு, அதன் அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்க திமுக தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதையும் படிங்க: பல் இழித்த பச்சை துண்டு பாலிடிக்ஸ்... ஒரே போடில் எடப்பாடி பழனிசாமியை காலி செய்த ஸ்டாலின்...!

திமுக அரசின் திட்டங்களையும் திமுக நடத்திய போராட்டங்களையும் மக்களிடம் விரிவாக விளக்கி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்க திமுக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில இந்த உறுப்பினர் சேர்க்கையை மினி தேர்தல் பிரச்சாரமாக கருதி களத்தில திமுக தேர்தல் பணியை தொடங்க உத்தரவிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வேளாண் துறையின் பெயரை மாற்றியது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...!