ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுக கட்சியில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.புதிய உறுப்பினர்களை மகிழ்விக்க கவர்ச்சி நடனம். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்களான கே சி வீரமணி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

வணிகர் சங்க மாவட்ட தலைவரான பொன்.கு, சரவணன் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை மகிழ்விக்கும் வகையில் கவர்ச்சியான பெண்களின் நடன நிகழ்ச்சியானது நடைபெற்றது அப்போது சில பெண்கள் மற்றும் ஆண்கள் புதிய நிர்வாகிகள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் பிற கட்சியினர் மத்தியில் தற்போது கவர்ச்சி நடனம் நடத்தப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனம், மற்றும் பேசும் பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சி ஆற்காடு நகர செயலாளர் ஆர்காடு நகர் ஜிம் சங்கர் வரவேற்பில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி அதிமுக இணைந்த அனைவருக்கும் துண்டு மற்றும் உறுப்பினர் அட்டை ஆகியவற்றை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

ஆனால் அதற்கு முன்னதாக மண்டபத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் இரண்டு பேர் மேடையில் நடனமாடியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் பொதுநிகழ்ச்சியில் இது போன்ற அறைகுறை ஆடைகளுடன் பெண்களின் ஆட்டம் கண்டிக்கத்தக்கது எனவும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...