தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 4 திமுக , 2 அதிமுக வசம் உள்ளது. திமுக வசம் உள்ள 4 இடங்களுக்கு அண்மையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் 3 திமுக வசமும், ஒன்று கூட்டணி கட்சியான மநீம-க்கு வழங்கப்பட்டது. தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸ் தேசிய தலைமை வழியே திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 4 சீட்டில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று. ஆனால் சிறிதும் யோசிக்காமல் திமுக, அனைத்து இடங்களும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது, ஆகையால் வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். மீண்டும் காங்கிரஸ் தலைமை திமுகவை தொடர்பு கொண்டபோதும் இதுகுறித்து பேசமறுத்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக ஆதரவு நிலைப்பாட்டிலே இருந்துள்ளார். ஏற்கனவே செல்வப்பெருந்தகை மீது பல புகார்களை காங்கிரஸ் தேசிய தலைமைக்கு நிர்வாகிகள் பலர் கொண்டு சென்றுள்ள நிலையில், இந்த விவகாரமும் இப்போது தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவால் காங்.,-ல் பரபரப்பு… ராகுல்காந்திக்கு வந்த புதிய சிக்கல்!!

மேலும்,தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில காலமாக சோடன்கர் - பெருந்தகை இடையே மோதல் நீடித்து வருவதாகவும், இதற்கு காரணம் பெருந்தகையை மாற்ற வேண்டும் என தலைமையிடம் சோடன்கர் கூறியுள்ளதே. இதன் வெளிப்பாடாகவே, மே 25ல் திருச்சியில் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சோடன்கர் பங்கேற்கவில்லை என்கின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மனகசப்பு மற்றும் திமுகவுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை செயல்பாடு என தமிழக காங்கிரஸில் சில சங்கடங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மே 29ம் தேதி டெல்லியில் முகாமிட்டு சில முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
இதையடுத்து உட்கட்சி பூசல் தொடர்பாக முக்கிய முடிவை காங்கிரஸ் தலைமை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக செல்வப்பெருந்தகை பதவி தப்புமா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: சிந்து நீர் ஒப்பந்தம் ரத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்... உண்மையை உடைத்த ஜெய்சங்கர்!!