திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கட்சியில் அன்புமணியை எம் பி ஆக்கிய போது தன்பக்கம் கட்சியை இழுக்க வேண்டுமென உள் அடி வேலைகளை பார்க்க துவங்கினார். பாமகவை ஆலமரமாக வியர்வை சிந்தி உருவாக்கியதை அதிலுள்ள கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார். பனத்தை வைத்து கொண்டு விலைக்கு வாங்கி பொய் பொய்யாக அன்புமணி கூறுவதாகவும் கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி எதையும் செய்யவில்லை, பாமகவை பெரிய கட்சியாக உருவாக்கியது தான் தான் அன்புமணிக்கு எந்த குறையும் வைக்கவில்லை நல்ல பள்ளியில் பயில வைத்து எம்பி ஆக அக்கி ராஜ்யசபா உறுப்பினராக்கி எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்ததாகவும், தெரிவித்தார்.காசு கொடுத்து கட்சி காரர்களை பொருளை விலைக்கு வாங்குவது போல் அன்புமணி செய்கிறார்.
தருமபுரியில் சுப்ரமணி ஒ,கே எஸ். என்னை சந்திக்க வந்த போது அவருக்கு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன், 5 ஆயிரம் கொடுத்து தடுத்தார். இது போன்று என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடமால் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் ஒகே எஸ் அந்த பணத்தை எம்.எல்.ஏ முகத்தில் வீசி விட்டு என்னை சந்தித்ததாகவும், பணத்திற்காக சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பதாகவும்,கூட்டம் போடுவது, நடைபயணம் செல்வது கிரேனில் மாலை போடுவது எல்லாம் பணத்தை கொடுத்து அன்புமணி செய்ய கூறுவதாக தெரிவித்தார். கிரேனில் ஆப்பிள் மாலை போடுவது, நூறு கார் போவது எல்லாம் கட்சி கொள்கைக்கு எதிரானது வீடு வீடாக கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என வருத்தம் உள்ளது அதை தான் அன்புமணியை செய்ய கோரினேன் அதனை செய்யவில்லை, பொது வெளியில் அன்புமணி தன்னை பற்றி விமர்ச்சிக்காமல் இருப்பது வெறும் நாடகம்.
இதையும் படிங்க: “பணத்தைக் கொடுத்து நிர்வாகிகளை வளைக்க பார்க்கிறார்” - அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு...!
வீட்டிற்குள் பேச வேண்டியதை பொதுவெளியில் அய்யா பேசுவதாக அன்புமணி கூறுகிறார், கட்டுக்கடங்காத மனக்குமுறலை ஊடகமுன்பு கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக தெரிவித்தார். எதிரிகள் கூட என் மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை, சமூக வலைதளங்களில் தன்னை கேவலமாக எழுதி வருகிறார்கள் அமைதியாக இருந்து கொண்டு இதனை அன்புமணி செய்து வருகிறார், பாமக இரண்டாக உள்ளது போன்று அன்புமணியே உருவகப்படுத்தி வருகிறார். குடும்பம் 40 பேர் கொண்டதாக இருந்தது பத்தாக மாறியுள்ளது. குடும்பத்திற்குள்ளாகவே விளையாடி கொண்டிருக்கிறார் .
பொதுக்குழு அறிவித்தவுடன் போட்டியாக அன்புமணி பொதுக்குழு அறிவிக்கிறார்.
பணத்திற்கு ஒரு கூட்டம் அன்புமணியிடம் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் பொறுப்புகளை உருவாக்கி வளர்த்த பிள்ளைகளை தன்னை திட்டுவதற்காக அன்புமணி மாற்றி உள்ளார். சமூக வலைதளங்களில் தன்னை திட்டுவதற்கு அன்புமணி மாற்றி இருந்தாலும் அவர்கள் மேல் எனக்கு கோவம் இல்லை.
பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணை மந்திரம் மாயம் போட்டு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி மாற்றியுள்ளார். நல்ல பேச்சாளர் நல்ல சிந்தனையாளர் வடிவேல் ராவணனுக்கு காரை கொடுத்து வளைச்சி போட்டிருக்கிறார். அன்புமணியிடம் ஊடகம் முன்பாக அய்யாவிடம் காலில் விழுந்து கட்சி தொண்டனாக இருப்பேன் என கூறுங்கள் என நண்பர்கள் தெரிவித்தும் இதில் தலையிடாதீர்கள் என அன்புமணி தெரிவித்ததாகவும்,அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி பாமக கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தாரு கட்சிக்காக எதையாவது செய்யக்கூடாதா என தன் மூத்த மகளிடம் தெரிவித்தார். எல்லாம் சரியாகிவிடும் என்று அன்புமணி மாமனார் தெரிவித்தார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை .
முன்னாள் எம்பி விஷ்னு பிரசாந்தையும் சந்திக்க விடாமல் தடுத்ததாக கூறினார். அறிவுரை அன்புமனிக்கு கூறினால் அதை அவர் ஏற்க மாட்டார் முயலுக்கு நாலு என்று கூறினால் அவர் மூன்று கால் என தெரிவிப்பார். மாம்பழ சின்னம் சின்ன ஒதுக்கியதாக கூறுவது பொய்யானது, தேர்தல் நேரத்தில் மட்டுமே சின்னம் ஒதுக்கிடு செய்வார்கள் பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள்
கட்சியின் அங்கீகாரமும், சின்னமும் போய் விட்டது, தன்னை சட்டமன்ற உறுப்பினர்களாக அன்புமனி ஆக்கிவிடுவார் என சிலர் அன்புமணியிடம் சுற்றி கொண்டிருக்கிறார்.தனக்கு தெரியாமலையே அன்புமணி வீட்டில் கட்சி அலுவலகத்தினை அவரது வீட்டிற்கு மாற்றி உள்ளார்.
கட்சியாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் தைலாபுரம் தோட்டம் தான் சட்டப்படியும் தேர்தல் ஆணையத்திடம் தைலாபுரம் தான் பாமக அலுவலகம் என கொடுத்துள்ளதாகவும் சட்டப்படி வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார். பொய் பொய்யாக சொன்னதை கேட்டு அன்புமணியிடம் சென்ற மாவட்ட செயலாளர் தன்னிடம் வர வேண்டும், தந்தையிடம் ஒட்டு கேட்பு கருவி வைத்தது எந்த விதத்தில் நியாயம் உலகத்தில் எங்கையாவது நடந்து இருக்கிறதா அன்புமனி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது, கட்சியில் குழப்பத்திற்கு இடமில்லை அன்புமணி நடத்துவது கட்சியே கிடையாது பணத்தை வைத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: பாட்டாளி சொந்தங்கள் என்னை கடவுளா பாக்குறாங்க! அன்புமணி சொல்றது எல்லாமே பொய்.. ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!